இலங்கையில் பொருளாதார நெருக்கடியின் கோரமுகம் வாழ்க்கையை வெறுக்கும் அளவிற்கு வேதனைதருவதாக வெளிப்பட ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமைமுதல் சனிக்கிழமை அதிகாலை வரை பம்பலப்பிட்டி மிலாகிரிய பெற்றோல் நிலையத்தில் காத்திருந்த பிரபல நிதியியல் ஊடகவியலாளர் ஷிஹார் அனீஸ் அவர்களை குளோப் தமிழுக்காக ஒலிவடிவ நேர்காணல் செய்திருந்தேன். ஊடகத்துறையில் அருண் ஆரோக்கிய நாதன் ஆகிய எனது நீண்ட கால நண்பரான ஷிஹார் கடந்தாண்டு ஜூலை மாத்திலேயே லெபனானுக்கு ஏற்பட்ட நிலை இலங்கைக்கு ஏற்படும் என எச்சரித்திருந்தவர். இலங்கையில் அடுத்து என்ன நடக்கக்கூடும் என்று உலகளாவிய உதாரணங்களோடு விளக்குகின்றார்